கல்குவாரிகளால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் : கூலிப்பாளையம், இச்சிப்பட்டி கிராம மக்கள் அச்சம்

கல்குவாரிகளால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் :  கூலிப்பாளையம், இச்சிப்பட்டி கிராம மக்கள் அச்சம்
Updated on
1 min read

குடியிருக்கும் வீடுகளுக்கும், உயிருக்கும் கல்குவாரிகளால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதாக, திருப்பூர் மாவட்டம் கூலிப்பாளைம், இச்சிப்பட்டி ஆகிய கிராம மக்கள் அச்சம் தெரிவித்து, ஆட்சியரிடம் நேற்று புகார் மனு அளித்துள்ளனர்.

திருப்பூர் கூலிப்பாளையம் ஆர்.எஸ். பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், "எங்கள் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு, தனியார் ஒருவர் கல்குவாரி தொழில் செய்து வந்தார். அங்கு வெடி வைத்து பாறைகளை உடைப்பதால் பாதிக்கப்பட்டோம். மேலும், காற்று மாசால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் சூழலுக்கு பலர் தள்ளப்பட்டுள்ளோம். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

பல்லடம் வட்டம் இச்சிப்பட்டி பொதுமக்கள் அளித்த மனுவில், "எங்கள் ஊருக்கு அருகே மூன்று கல்குவாரிகள் உள்ளன. இதில், வெடி வைப்பதால் குடியிருக்கும் வீடுகளுக்கும், பொதுமக்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை" என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஓய்வூதியக் கணக்கு முடக்கம்

இதையடுத்து வங்கி கிளையிடம் கேட்டபோது, அவர்களிடம் இருந்து உரிய பதில் இல்லை. இந்நிலையில், ஓய்வூதியப் பணம் எடுக்க இயலாமல் செய்துள்ளனர். இதுதொடர்பாக தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தேன். மூன்று மாதங்களாக ஓய்வூதிய வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. உரிய விசாரணை நடத்தி வங்கிக் கணக்கை இயக்கவும், ஓய்வூதியப் பலன் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இழப்பீடு வேண்டும்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in