புதிதாக 134 பேருக்கு கரோனா தொற்று :

புதிதாக 134 பேருக்கு கரோனா தொற்று :
Updated on
1 min read

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 32 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி யானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 47,681-ஆக அதிகரித்துள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் 445 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 24 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியான நிலையில், 14 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 298 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக 78 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51,354-ஆக உயர்ந்துள்ளது. 49,799 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 927 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in