தேனியில் பெண்ணிடம் நகை பறிப்பு :

தேனியில் பெண்ணிடம்  நகை பறிப்பு :
Updated on
1 min read

தேனி ராம்நகரைச் சேர்ந்த முனியாண்டி மனைவி பொன்னுத்தாய் (58). இவர், பெரியகுளம் சாலையில் உள்ள தனது மகன் சடையாண்டியின் மருந்துக் கடைக்கு நேற்று முன்தினம் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை இருசக்கர வாகனத்தில் இருவர் பின்தொடர்ந்து வந்துள்ளனர். கோட்டைக்களம் அருகே சென்றபோது பொன்னுத்தாய் கழுத்தில் அணிந்திருந்தஏழரை பவுன் நகையை இருவரும் பறித்துச் சென்றனர். இது தொடர்பாக தேனி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in