சாலையில் தேங்கிய மழைநீரில் அவதியுடன் செல்லும் வாகனங்கள் :

சாலையில் தேங்கிய மழைநீரில் அவதியுடன் செல்லும் வாகனங்கள்  :
Updated on
1 min read

கிருஷ்ணகிரி அணை பிரிவு செல்லும் சாலையில் இருந்து அணைக்குச் செல்லும் சாலையில் மழைநீர் தேங்கி உள்ளது. இதேபோல் அப்பகுதி யில் உள்ள பொன்னியம்மன் கோயில் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு மழைநீர் தேங்கி உள்ளது.

இவ்விரு இடங்களை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள், சேற்றில் சிக்கி கீழே விழுந்து காயம் அடைந்து செல்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித் துள்ளனர். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது, கிருஷ்ணகிரி அணைக்கு செல்லும் சாலையின் இரண்டு பக்கமும் ஆக்கிரமிப்பால், மழை நீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கிவிடுகிறது.

இதேபோல், பொன்னியம்மன் கோயில் கிராமத்திலும் மழை நீர் தேங்கி உள்ளது.என வே இந்த 2 பகுதியிலும் ஆக்கிரமிப்பை அகற்றி, சாக்கடைக் கால்வாய் கட்டி, மழைநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in