அனுமதியின்றி பேரணி காங். எம்பி உட்பட 110 பேர் மீது வழக்கு :

அனுமதியின்றி பேரணி  காங். எம்பி உட்பட 110 பேர் மீது வழக்கு :
Updated on
1 min read

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து சைக்கிள் பேரணி நேற்று முன்தினம் நடந்தது.

இதில் காங்கிரஸ் எம்பி செல்லக்குமார் பங்கேற்று மாட்டு வண்டி ஓட்டிச் சென்றார்.

இந்நிலையில் அனுமதி யின்றி சைக்கிள் பேரணி நடத்தியதாக கிருஷ்ணகிரி தொகுதி எம்பி டாக்டர் செல்லக்குமார் உட்பட 110 பேர் மீது கிருஷ்ணகிரி நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in