செஞ்சி பள்ளி மாணவி மர்ம மரணம் சந்தேகத்தின் பேரில் 2 பேர் கைது :

செஞ்சி பள்ளி மாணவி மர்ம மரணம் சந்தேகத்தின் பேரில் 2 பேர் கைது :
Updated on
1 min read

செஞ்சி அருகே உள்ளது கொங்கரப்பட்டு கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி அங்குள்ள அரசுப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 11-ம் தேதி மாலை விவசாய நிலத்திற்கு மாடு மேய்க்கச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து சிறுமியை தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் கொங்கரப்பட்டு கிராமத்தில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் அச்சிறுமி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். உடலில் காயங்கள் இருந்தன.

இதையடுத்து செஞ்சி போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டி யம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் ஆள் கடத்தல் வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து 17 வயதுசிறுவன் உட்பட 4 பேரிடம் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து நேற்று இவ் வழக்கில் சந்தேகத்தின் பேரில் மணியம்பட்டை சேர்ந்த 17 வயது சிறுவன்மற்றும் கொங்கரப்பட் டைச் சேர்ந்த ஜெயக்கு மார் (23) ஆகியோரை கைது செய்துள்ளனர்.

“பிரேத பரிசோதனை அறிக்கை முழுமையாக கிடைத்தவுடன் இறப்பின் தன்மையை கொண்டும், கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்த உள்ள விசாரணை யின் அடிப்படையிலும் அடுத்த கட்ட நடவடிக் கையை மேற்கொள்ள இருக்கிறோம்” என்றுபோலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in