தேனியில் கரோனாவால் - இறந்தவரின் குடும்பத்துக்கு மானியக்கடன் :

தேனியில் கரோனாவால் -  இறந்தவரின் குடும்பத்துக்கு மானியக்கடன் :
Updated on
1 min read

குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபர் கரோனா தொற்றால் உயிரிழந்திருந்தால் அக்குடும்பத்தின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மானியக்கடன் வழங்கப்படுகிறது.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்தவர் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள்ளும், இறந்தவர் 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஒரு லட்ச ரூபாய் மானியத்தில், அதிகபட்சமாக ரூ.4 லட்சம் வரை வழங்கப்படும். ஆண்டுக்கு 6 சதவீத வட்டி.

பயன்பெற விரும்புவோர் உரிய ஆவணங்களுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்று ஆட்சியர் க.வி.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in