போதை மருந்து, மாத்திரை விற்பனை: 7 பேர் கைது :

போதை மருந்து, மாத்திரை விற்பனை: 7 பேர் கைது :
Updated on
1 min read

திருச்சி பழைய மதுரை சாலை பகுதியிலுள்ள ஜீவா நகர், ரயில்வே கேட் உள்ளிட்ட இடங்களில் மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில், தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் இரவு சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டிருந்த உறையூர் வடிவேல் நகர் குமார் (23), வரகனேரி தெற்கு பிள்ளையார் கோயில் தெரு ராம்நாத் (31), தென்னூர் நந்தகுமார் (24), உறையூர் நெசவாளர் காலனி பாலாஜி (20), காந்தி மார்க்கெட் சுண்ணாம்புக்காரத் தெரு பிரகாஷ் (26), உறையூர் வெக்காளியம்மன் நகர் குமார் (எ) குமரேசன் (24) ஆகியோரை கைது செய்தனர். இவர்களில் ராம்நாத், பிரகாஷ் ஆகியோர் பொறியாளர்கள் என்பது தெரியவந்தது.

மேலும், இவர்களுக்கு போதை மருந்துகளை விற்ற மொத்த மருந்த விற்பனையாளரான உறையூர் சாலை ரோடு பகுதியைச் சேர்ந்த சக்திதாசன் (31) என்பவரையும் போலீஸார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 23,450 போதை மாத்திரைகள், 5 கிலோ கஞ்சா, 3 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

சிறப்பாக செயல்பட்ட கோட்டை இன்ஸ்பெக்டர் தயாளன், சப் இன்ஸ்பெக்டர் கருணாகரன் உள்ளிட்ட தனிப்படை போலீஸாரை மாநகர காவல் ஆணையர் அருண், துணை ஆணையர் சக்திவேல் உள்ளிட்ட அதிகாரிகள் பாராட்டினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in