

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் பா. விஷ்ணு சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் லார்சன் அண்ட் டூப்ரோ கட்டுமான நிறுவனம் மூலம் வரும் 17-ம் தேதி வரை ராமையன்பட்டி சாலை பேருந்து நிறுத்தம் முதல் ராஜபாளையம் நோக்கி செல்லும் சாலை வரையிலும், வரும் 19-ம் தேதி வரை நயினார்குளம் சாலை முழுவதும் , சுத்தமல்லி பிரதான சாலை முதல் விஸ்வநாதநகர் வரையிலும், வரும் 25-ம் தேதி வரை தச்சநல்லூர் மதுரை சந்திப்பு சாலையிலிருந்து டவுண் நோக்கி செல்லும் சாலை மற்றும் சந்திமறித்தம்மன் கோயில் ராமையன்பட்டி செல்லும் சாலை முழுவதும், வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச் சாலையிலிருந்து மதுரை செல்லும் சாலை முதல் இந்தியா சிமென்ட்ஸ் ஆபிசர்ஸ் காலனி வரையிலும் பாதாள சாக்கடை திட்டப்பணி நடைபெறுகிறது.
இதுபோல் ஆகஸ்ட் 19-ம் தேதி வரை வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச் சாலையிலிருந்து மதுரை செல்லும் சாலை முதல் இந்திராநகர் வரையிலும், வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச் சாலையிலிருந்து மதுரை செல்லும் சாலை முதல் இந்தியா சிமென்ட்ஸ் ஆபிசர்ஸ் காலனி வரையும், வரும் 25-ம் தேதி பேட்டை- பழையபேட்டை இணைப்புச் சாலையில் இருந்து மின்சாரவாரிய அலுவலகச் சாலை வரையிலும், வரும் 28-ம் தேதி வரை டவுன் ஆர்ச்சில் இருந்து அருணகிரி தியேட்டர் செல்லும் சாலை முழுவதும் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற உள்ளது.
இச்சாலைகளை கடந்து செல்லும் போது பொதுமக்கள் மிகவும் கவனமாக செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.