கஞ்சா, புகையிலை, லாட்டரி விற்ற 233 பேர் கைது :

கஞ்சா, புகையிலை, லாட்டரி விற்ற 233 பேர் கைது :
Updated on
1 min read

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் தீவிர ரோந்துப் பணி மேற்கொண்டு, வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மது விற்பனை செய்ததாக 63 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 441 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல், கஞ்சா விற்றதாக 17 பேர் கைது செய்யப்பட்டு, சுமார் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக 10 பேரும், புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததாக 153 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in