பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இ.கம்யூ. ஆர்ப்பாட்டம் :

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இ.கம்யூ. ஆர்ப்பாட்டம்  :
Updated on
1 min read

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, திருப்பூர் பட்டுக்கோட்டையார் நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட்மாவட்ட செயலாளர் எம்.ரவி தலைமை வகித்தார். ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் எம்.பஞ்சவர்ணம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளைக்கான விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். கரோனா தொற்றின் 2-ம் அலையின் வேகம் குறைந்து, 3-வது அலை வருவதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில், தொற்று பாதிப்பிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்ள தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால்,மாநிலங்களுக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்குவதில் மத்திய அரசு தாமதம் செய்து வருகிறது. தமிழகத்துக்கு தேவை யான கரோனா தடுப்பூசிகளை தட்டுப்பாடின்றி விரைந்து வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

இருசக்கர வாகனம் மற்றும் சமையல் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்தும், விறகு அடுப்புகளை பார்வைக்கு வைத்தும் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in