2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; இளைஞர் கைது :

2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; இளைஞர் கைது :
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் ரேஷன் பொருட்களை சேகரித்து கர்நாடக மாநிலத்துக்கு கடத்திச் செல்வதாக உணவுப் பொருட்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமையிலான போலீஸார் நேற்று காலை கெலமங்கலம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தில் சோதனை செய்தனர். சோதனையில், வாகனத்தில் 2 டன் ரேஷன் அரிசியை கடத்த முயன்றது தெரிய வந்தது. விசாரணையில், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் கே.செட்டிஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமார் (27) என்பவர் ராயக்கோட்டை, நெல்லூர் ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கர்நாடக மாநிலத்துக்கு கடத்திச் சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிந்தது.

இதையடுத்து, அஜித்குமாரை கைது செய்த போலீஸார் 2 டன் ரேஷன் அரிசி மற்றும் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in