தாமிரக் கம்பிகள் திருட்டு :

தாமிரக் கம்பிகள் திருட்டு :
Updated on
1 min read

சூளகிரி அருகே மின்மாற்றியில் 60 கிலோ தாமிரக் கம்பிகளை திருடியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த மேலுமலை பகுதியில் மின்மாற்றியுள்ளது. இதில், சில தினங்களுக்கு முன்னர் மர்ம நபர்கள் 60 கிலோ எடையுள்ள 15 தாமிரக் கம்பிகளை திருடிச் சென்றனர். இதன் மதிப்பு ரூ.60 ஆயிரமாகும்.இதுதொடர்பாக மின்வாரிய சின்னாறு பிரிவு உதவி பொறியாளர் பழனி சூளகிரி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீஸார் வழக்குப் பதிவு செய்து தாமிரக் கம்பிகளை திருடியவர்களை தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in