பேக்கரி கடை உரிமையாளர் வீட்டில் திருட்டு :

பேக்கரி கடை உரிமையாளர் வீட்டில் திருட்டு :
Updated on
1 min read

இந்நிலையில், காமாட்சியின் கார் ஓட்டுநரான கோவிந்தராஜ் (28) என்பவர் நேற்று காலை காமாட்சியின் வீட்டுக்கு சென்றார். அப்போது, வீட்டின் முன் பக்க கதவு திறந்துக்கிடந்தது. வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மாயமாகியிருந்தது. வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் கீழே சிதறிக்கிடந்தன.

உடனே, காமாட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், காமாட்சி அங்கு விரைந்து வந்தார். அதற்குள்ளாக காவல் துறையினரும் அங்கு வந்து விசாரணை நடத்தினர். அதில், காமாட்சி வீட்டில் இல்லாததை அறிந்துக்கொண்ட மர்ம நபர்கள் இரவு நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்து பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளிப்பொருட்கள், வாசலில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஆகியவற்றை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து நாட்றாம்பள்ளி காவல் நிலையத்தில் காமாட்சி புகார் செய்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in