மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம் :

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நீதி மய்யத்தினர். படம்: வி.எம்.மணிநாதன்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நீதி மய்யத்தினர். படம்: வி.எம்.மணிநாதன்.
Updated on
1 min read

வேலூர், திருப்பத்தூரில் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மக்கள் நீதி மய்யம் வேலூர் வடக்கு, தெற்கு மற்றும் மாநகர மாவட்டம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளர்கள் சத்தியநாராயணன், சரவணன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட இளைஞரணி செயலாளர் விக்ரம், மாநகர செயலாளர் ஸ்டாலின் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

திருப்பத்தூர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in