திருச்சி மாவட்டத்தில் - 65 கொள்முதல் நிலையங்களில் 66,452 டன் நெல் கொள்முதல் :

துறையூர் ஆலத்துடையான்பட்டி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நேற்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு.
துறையூர் ஆலத்துடையான்பட்டி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நேற்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு.
Updated on
1 min read

திருச்சி மாவட்டத்தில் இதுவரை 65 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 66,452 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள் ளது என மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சி மாவட் டத்தில் நிகழாண்டில் 65 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு இதுவரை 66,452 டன் நெல் கொள்முதல் செய் யப்பட்டு,13,970 விவசாயிகளுக்கு ரூ.120 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

துறையூர் வட்டம் உப்பிலிய புரம் பகுதியில் 5 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வந்த நிலையில், நெல் வரத்து அதிகமாக இருப்பதால், ஜூலை 2-ம் தேதி முதல் வைரிசெட்டிப்பாளையம், பி.மேட்டூர், எரக்குடி ஆகிய இடங் களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இவற்றின் மூலம் இதுவரை 6,332 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

ஆட்சியர் ஆய்வு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in