கொலை வழக்கில் 3 பேர் கைது :

கொலை வழக்கில் 3 பேர் கைது :
Updated on
1 min read

கரூர் மாவட்டம் கிருஷ்ணராய புரத்தை அடுத்த பிச்சம்பட்டி அருகே கடந்த 4-ம் தேதி தனியார் கட்டுமான நிறுவன லாரி ஓட்டுநர் செந்தில், மேற்பார்வையாளர் தர்மதுரை(23) ஆகியோருக்கும் இருசக்கர வாகனத்தில் வந்த அப்பகுதியை சேர்ந்தவர் களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பிச்சம்பட்டி பகவதியம்மன் கோயில் முன் நேற்று முன்தினம் சமாதானப் பேச்சுவார்த்தை நடந்தபோது தர்மதுரையுடன் வந்த 10-க்கும் மேற்பட்டோர் அங்கிருந்த கொத்தனார் பிரபு (35) பிரபுவை வெட்டி கொன்றனர். இதுகுறித்து மாயனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து தர்மதுரை, அவரது அண்ணன் ராஜதுரை(26), அபிஷேக் என்கிற வேல்முருகன் (21) ஆகியோரை நேற்று முன்தினம் இரவு கைது செய் தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in