ரூ.6.60 கோடி கையாடல் புகாரில் ஒருவர் கைது :

ரூ.6.60 கோடி கையாடல் புகாரில் ஒருவர் கைது :
Updated on
1 min read

விழுப்புரத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ திருச்சபைக்கு சொந்தமான வணிக வளாகத்தை விற்பனை செய்ய திட்டமிட்டு சென்னை தி.நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திடம் ரூ.13 கோடியே 64 லட்சத்து 50 ஆயிரம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

இதற்கு முன்பணமாக நேரடியாக ரூ.1 கோடியே 62 லட்சமும்,ரூ.4 கோடியே 98 லட்சத்து 15 ஆயிரம் வரைவோலையாகவும் பெற்று அதனை திருச்சபையின் மத்திய கருவூல கணக்கில் வரவு வைக்குமாறு அப்போதைய செயலாளராக இருந்த சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த சார்லஸ் (69) என்பவரிடம் திருச்சபை சார்பில் வழங்கப்பட்டது.

ஆனால் அந்த வரைவோலையில் குறிப்பிட்ட தொகையை திருச்சபை கணக்கில் வரவு வைக்காமல் சார்லஸ் மற்றும் அப்போதைய பொருளாளராக இருந்த ஞானராஜ் ஆகியோர் திருச்சியை அடுத்த திருவெறும்பூரில் உள்ள ஒரு வங்கியின் மூலம் அந்த பணத்தை கையாடல் செய்தனர். இதற்கு வில்பர்ட் டேனியல், ஆல்பர்ட் இன்பராஜ் ஆகியோரும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து திருச்சபையின் தற்போதைய பொருளாளரான ஆண்ட்ரூஸ் ரூபன் அளித்த புகாரின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் ஞானராஜை மே மாதம் கைது செய்தனர். கும்பகோணம் மறைந்திருந்த சார்லஸை நேற்று கைது செய்தனர். வில்பர்ட் டேனியல், ஆல்பர்ட் இன்பராஜை தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in