போலி நகைகளை விற்று மோசடி: 2 பெண்கள் கைது :

போலி நகைகளை விற்று மோசடி: 2 பெண்கள் கைது  :
Updated on
1 min read

திருவள்ளூர், கொண்டாபுரம் தெருவில் வசித்து வரும் விமல் சந்த் என்பவர், அப்பகுதியில் நகைக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம் 30-ம்தேதி, கடைக்கு வந்த இரண்டு பெண்கள் 8 கிராம் பழைய நகையைக் கொடுத்து விட்டு, அதற்கு பதிலாக 8 கிராம் புதிய நகைகளை வாங்கிச் சென்றனர்.

பின்னர், மறுநாள் கடைக்கு வந்த மற்றொரு பெண் 14 கிராம் எடை கொண்ட பிரேஸ்லெட்டை கொடுத்து விட்டு, அதே எடைக்கு புதிய நகையை வாங்கிச் சென்றார். அதற்கு அடுத்த நாள் பெண்கள் தன்னிடம் விற்ற பழைய நகைகளை விமல் சந்த் கொண்டு சென்று உருக்கினார். அப்போது, அவை போலி நகை எனத் தெரியவந்தது.

இதுகுறித்து, விமல்சந்த் திருவள்ளூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக, போலீஸார் வழக்குப் பதிவு செய்து, உத்தரப்பிரதேச மாநிலம், சாப்புரா பாலியாவைச் சேர்ந்த மான்ஷி (40), சோனிகுப்தா (30) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து நகையும் பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in