தொழில் முனைவோர் மாதிரி திட்டம் அறிமுகம் :

தொழில் முனைவோர் மாதிரி திட்டம் அறிமுகம்  :
Updated on
1 min read

மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புக்கான தொழில் முனைவோர் மாதிரி திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதம மந்திரியின் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மீனவர்கள், மீன் வளர்ப்போர், சுய உதவிக் குழுக்கள், அமைப்புகள், தனி நபர் தொழில் முனைவோர், தனியார் நிறுவனங்கள் பயன்பெறலாம். மத்திய- மாநில அரசுகள் மூலம் பொது பிரிவினருக்கு 25 சதவீதம் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு 30 சதவீதம் நிதியுதவி வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் வேலூர் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். விண்ணப் பிக்க வேண்டிய கடைசி நாள் வரும் 31-ம் தேதியாகும். மேலும், விவரங்களுக்கு www.fisheries.gbv.in என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in