குண்டர் சட்டத்தில் இருவர் கைது :

குண்டர் சட்டத்தில் இருவர் கைது  :
Updated on
1 min read

விழுப்புரம், விராட்டிகுப்பம் பகுதியைச் சேர்ந்த திரும்ஜாபர் சையத் (28), விழுப்புரம், முத்தோப்பு பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீத் (35) ஆகிய இருவரும் ரேஷன் அரிசி கடத்தலில் சிக்கி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் சிறையில் இருந்து வருகின்றனர்.

இந்த இருவரின் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு, இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடுமாறு விழுப்புரம் ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாதா பரிந்துரை செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட ஆட்சியர் மோகன் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய தற்போது உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு நகலை போலீஸார் கடலூர் மத்திய சிறையில் உள்ள இருவருக்கும் சிறை ஊழியர்கள் மூலம் வழங்கினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in