

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகேயுள்ள அழகன்குளம் தேவர் குடியிருப்பைச் சேர்ந்தவர் கார்த்திக்(24). இவரும் 17 வயது சிறுமியும் 3 ஆண்டுகளாகக் காதலித்துள்ளனர். இந்நிலையில் கார்த்திக் அச்சிறுமியின் படங்களை மொபைலில் வைத்துக்கொண்டு, திருமணம் செய்வதாகக்கூறி, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு, அச்சிறுமியின் படங்களை சிலருக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பினார். அதனையடுத்து அச்சிறுமியின் தாய் திருமண வயது வந்ததும் தனது மகளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கார்த்திக்கின் குடும்பத்தாரிடம் கேட்டுள்ளார். ஆனால் கார்த்திக் மற்றும் அவரது அண்ணன் விஜய், தாய் ராமலெட்சுமி, பாட்டி புஷ்பவல்லி ஆகியோர் திருமணம் செய்து கொள்ள முடியாது எனக்கூறி சிறுமியின் தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். சிறுமியின் தாயார் அளித்த புகாரின்பேரில் கார்த்திக் குடும்பத்தினர் மீது மகளிர் போலீஸார் போக்ஸோ பிரிவில் வழக்குப்பதிந்து கார்த்திக்கை கைது செய்தனர்.