வாட்ஸ் அப்பில் புகார்: ஒரு மணி நேரத்தில் தீர்வு :

வாட்ஸ் அப்பில் புகார்: ஒரு மணி நேரத்தில் தீர்வு :
Updated on
1 min read

விக்கிரவாண்டி அருகே பனை மலை கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலட்சுமி (15). பழங்குடி இரு

ளர் வகுப்பைச் சேர்ந்த இவர் தற்போது பத்தாம் வகுப்பு முடித்துள் ளார். மேல் படிப்புக்காக இருப்பிட சான்றிதழ், வருமானவரி சான் றிதழ் கேட்டு இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்துள்ளார். பல நாட்களாகியும் சான்றிதழ் வழங்கப்படவில்லை.

இந்த தகவலை நேற்று முன்தினம் ஆட்சியர் கவனத்திற்கு வாட்ஸ்அப் மூலம் அம்மாணவி கொண்டு சென்றுள்ளார். உடனே, ஒரு மணி நேரத்தில் அதிரடியாக டிஜிட்டல் சான்றிதழை ஆட்சியர் மோகன் வழங் கினார். இதைத்தொடர்ந்து அம் மாணவி தனது பெற்றோருடன் நேற்று ஆட்சியரை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in