பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி - மாவட்டங்களில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் :

சமயநல்லூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்.
சமயநல்லூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்.
Updated on
1 min read

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி மதுரை, திண்டுக் கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கம்யூ னிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மதுரை மாவட்டம், சமயநல்லூரில் மார்க்சிஸ்ட் மேற்கு ஒன்றியச் செயலாளர் பி.ஜீவானந்தம் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாநில செயற்குழு உறுப்பினர் மதுக் கூர் ராமலிங்கம், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத்தாய் ஆகியோர் பேசினர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்ணன், சிபிஐ (எம்எல்) பகத்சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

யா.ஒத்தகடையில் நடந்த ஆர்ப் பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் தாலுகா செயலாளர் எம்.கலைச்செல்வன் தலைமை வகித்தார்.

திண்டுக்கல்

ராமநாதபுரம்

ராமேசுவரம் தபால் நிலையம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா துணை செயலாளர் ப.வடகொரியா தலைமை வகித்தார்.

விருதுநகர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in