6 நாட்டுத்துப்பாக்கிகள் நாமக்கல்லில் பறிமுதல் :

6 நாட்டுத்துப்பாக்கிகள் நாமக்கல்லில் பறிமுதல் :
Updated on
1 min read

நாமக்கல்லில் உரிமம் இல்லாத 6 நாட்டுத் துப்பாக்கிகளை காவல் துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் அகே கொண்டிசெட்டிப்பட்டி நரிக்குறவர் காலனியில் உரிமம் இல்லாத துப்பாக்கிகள் சிலர் வைத்திருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் நாமக்கல் காவல் துறையினர் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த குப்பன் (29), தேவா (20), சந்துரு (20), சுப்பிரமணி (47), விக்ரம் (32) ஆகியோர் உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 6 நாட்டுத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in