போலீஸாருக்கு ஆதரவாக மக்கள் மனு :

போலீஸாருக்கு ஆதரவாக மக்கள் மனு  :
Updated on
1 min read

தென்காசி மாவட்டம் புளியரை தாட்கோ நகரைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் அந்தோணி. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரேஷன் அரிசி கடத்தியதாக இவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். தனது தந்தையை தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்து, அவரது மகள் அபிதா தொடர் போராட்டங்களில் ஈடுபட்டார்.

இந்நிலையில், புளியரை தாட்கோ நகர் பகுதியைச் சேர்ந்த மக்கள் நேற்று தென்காசி ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மனு அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அவர்கள் மீது அபிதா குடும்பத்தினர் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி போராட்டம் நடத்தி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். போலீஸார் மீதான நடவடிக் கையை கைவிட வேண்டும்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in