சமூக மக்கள் குடும்பத்தை தள்ளி வைத்ததாக பெண் புகார் : திருப்பத்தூர் வட்டாட்சியர் விசாரணை

சமூக மக்கள் குடும்பத்தை தள்ளி வைத்ததாக பெண் புகார் :  திருப்பத்தூர் வட்டாட்சியர் விசாரணை
Updated on
1 min read

திருப்பத்தூர் அருகே தங்களின் சமூக மக்கள் தனது குடும்பத்தைத் தள்ளி வைத்துள்ளதாக பெண் ஒருவர் தெரிவித்த புகார் குறித்து வட்டாட்சியர் விசாரித்து வருகிறார்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே சிராவயல் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தமிழக முதல்வர் தனிப்பிரிவுக்கு சமீபத்தில் புகார் மனு அனுப்பியிருந்தார். இந்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் குடும்பத்துக்கும், எங்களது உறவினர்கள் சிலருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து அவர்களது தூண்டுதலின் பேரில், எங்களின் சமூக மக்கள் கூட்டம் நடத்தி எனது குடும்பத்தைத் தள்ளி வைத்துள்ளனர். இதனால் எங்களுடன் யாரும் பேசுவதில்லை. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி உத்தரவின் பேரில் வட்டாட்சியர் ஜெயந்தி சிராவயல் கிராமத்தில் விசாரணை நடத்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in