திண்டுக்கல் கொள்ளை வழக்கில் 5 பேர் கைது :

திண்டுக்கல் கொள்ளை வழக்கில் 5 பேர் கைது :
Updated on
1 min read

திண்டுக்கல்லில் சோப் கம்பெனி உரிமையாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளைபோன வழக்கில் 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாலப்பட்டி காமாட்சி நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார், கடந்த 10-ம் தேதி குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தார். அப்போது இவரது வீட்டுக்குள் புகுந்த நபர்கள் 40 பவுன் நகைகள், ரூ 23 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர். தாலுகா போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.

இதில், மேட்டுப்பட்டியை சேர்ந்த வீரபத்திரன் (34), சாமி யார் தோட்டத்தைச் சேர்ந்த சாமிநாதன் (34), திண்டுக் கல்லைச் சேர்ந்த வினோத் (34), ஹரிபிரசாத் (25), ரமேஷ்ராஜா (34) ஆகியோர் சேர்ந்து கொள் ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இவர்கள் ஐந்து பேரை யும் கைது செய்த போலீஸார், 25 பவுன் நகை, ரூ.15 லட்சம், மூன்று இரு சக்கர வாகனங் களைப் பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in