

திருநெல்வேலியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9 முதல் 12 -ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.
திருநெல்வேலி டவுன் ஜவகர் உயர்நிலைப் பள்ளியில் பாடப்புத்தகங்களை பள்ளி தலைமை ஆசிரியை மாலா வழங்கினார். பள்ளிகளில் சமூக இடைவெளியை பின்பற்றி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.