குலசேகரநாத சுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா :

குலசேகரநாத சுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா  :
Updated on
1 min read

தென்காசி காசிவிஸ்வநாத சுவாமி கோயிலின் உப கோயிலான குலசேகரநாத சுவாமி கோயில், தென்காசியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் அருகில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் 23-ம் தேதி திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. இதையடுத்து, கோயிலில் 11-வது வருஷாபிஷேக விழா நேற்று காலை 8.30 மணி முதல் 10 மணிக்குள் நடைபெற்றது. கரோனா பரவல் காரணமாக பக்தர்கள் பங்கேற்பில்லாமல் முத்துக்கிருஷ்ண சிவாச்சாரியார் தலைமையில் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு, விமானக் கலசங்களுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in