திருப்பத்தூர் அருகே - வியாபாரி வீட்டில் நகை, பணம் திருட்டு :

திருப்பத்தூர் அருகே -  வியாபாரி வீட்டில் நகை, பணம் திருட்டு :
Updated on
1 min read

திருப்பத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை திருடிச்சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர் அடுத்த மொளகாரன் பட்டியைச் சேர்ந்தவர் குணசேகரன் (60). இவர், வீட்டு வசதி வாரியம் அருகே ஆட்டோ மொபைல் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், சென்னையில் உள்ள தனது மகன் வீட்டுக்கு குணசேகரன் சென்றார். நேற்று வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 50 ஆயிரம் பணம், 5 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து கந்திலி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in