சிறுமியை கடத்தி திருமணம் செய்த இளைஞர் கைது :

சிறுமியை கடத்தி திருமணம் செய்த இளைஞர் கைது  :
Updated on
1 min read

திருப்பூரை சேர்ந்த 17 வயது சிறுமி, பிளஸ் 2 படித்து வந்தார்.வீட்டின் அருகே பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த உடுமலையை சேர்ந்த தவசி (20) என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 15-ம் தேதி சிறுமியுடன் மாயமானார். சிறுமியை திருமணம் செய்து, அவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறினாராம்.

இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், திருப்பூர் வடக்கு போலீஸார் தேடி வந்த நிலையில், உடுமலை அருகே இருவரையும் மீட்டனர். சிறுமியை கடத்தி குழந்தை திருமணம் செய்தல் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டங்களின் கீழ் போலீஸார் வழக்கு பதிந்து இளைஞரை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in