பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் :

பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்  :
Updated on
1 min read

தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், மதுவிலக்கை அமல்படுத்தக்கோரியும் திண்டுக்கல் அருகே நல்லாம்பட்டியில் பாமகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மாவட்ட பாமக அமைப்புச் செயலாளர் திருப்பதி தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் சோழராஜன் முன்னிலை வகித்தார். ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாமக நிர்வாகிகள் தங்கள் வீடுகள் முன் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in