பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா சார்பில் கரோனா உதவி மையம் :

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா சார்பில் கரோனா உதவி மையம் :
Updated on
1 min read

பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிகாடு பேருந்து நிலையம் அருகில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சார்பில் கரோனா உதவி மையம் நேற்று தொடங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, அந்த அமைப்பின் நகரத் தலைவர் அமானுல்லா தலைமை வகித்தார். கரோனா உதவி மையத்தை பெரம்பலூர் மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் அப்துல் ஹாதி திறந்துவைத்தார். அரசு சித்த மருத்துவர் அகிலன், கரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்வது, சிகிச்சை முறைகள் குறித்து விளக்கினார். இங்கு, சித்த மருத்துவம் மற்றும் அக்குபஞ்சர் முறை சிகிச்சை இலவசமாக அளிக்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in