தென்காசி மாவட்ட புதிய ஆட்சியர் பொறுப்பேற்பு :

ச.கோபாலா சுந்தரராஜ்
ச.கோபாலா சுந்தரராஜ்
Updated on
1 min read

தென்காசி மாவட்ட புதிய ஆட்சியராக ச.கோபாலா சுந்தரராஜ் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

இம்மாவட்டத்தில் இதுவரை ஆட்சியராக இருந்த சமீரன் கோவை மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டதை அடுத்து புதிய ஆட்சியராக தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியத்தில் இணை மேலாண்மை இயக்குநர் மற்றும் திட்ட இயக்குநராக பணியாற்றி கோபாலா சுந்தரராஜ் நியமிக்கப்பட்டார். தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று அவர் பொறுப்பேற்றார். 2012-ல் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று தூத்துக்குடி மாவட்டத்தில் சார் ஆட்சியராகவும், சென்னை பெருநகர துணை ஆணையராகவும் பொறுப்புகளை வகித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in