விதிகளுடன் கடைகளை திறக்க புகைப்பட கலைஞர்கள் கோரிக்கை :

விதிகளுடன் கடைகளை திறக்க புகைப்பட கலைஞர்கள் கோரிக்கை :
Updated on
1 min read

வேலூர் மாவட்டத்தில் கரோனா விதிகளை பின்பற்றி புகைப்பட கடைகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் எனக்கோரி புகைப்பட கலைஞர்கள் நலச்சங் கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனிடம், வேலூர் மத்திய மாவட்ட புகைப்பட அங்காடி உரிமையாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் நலச்சங்கத்தினர் நேற்று அளித்த கோரிக்கை மனுவில், ‘‘கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தாக்கத்தால் வீடியோ, புகைப்பட கலைஞர்கள் கடை உரிமையாளர்கள் கடைகளை திறக்க முடியவில்லை. வாழ்வாதாரம் இழந்துள்ள நிலையில் கடைகளை திறந்து வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

திருமணம், பொது நிகழ்ச்சி களுக்கு சென்று வர அனுமதி வழங்க வேண்டும். புகைப்பட கலைஞர்களுக்காக தனி நல வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறை களை பின்பற்றி நடந்துகொள் கிறோம்’’ என தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in