சிறுமிக்கு திருமணம்; 6 பேர் மீது வழக்கு :

சிறுமிக்கு திருமணம்;  6 பேர் மீது வழக்கு :
Updated on
1 min read

கரூர் ராயனூர் அருகேயுள்ள வெள்ளகவுண்டன் நகரைச் சேர்ந்தவர் வடிவேல்(29). இவருக்கும் 15 வயது சிறுமிக்கும் கொடையூரில் கடந்த 13-ம் தேதி திருமணம் நடைபெற்றது.

இதையறிந்த அரவக்குறிச்சி ஒன்றிய சமூக நல அலுவலர் மைனாவதி, சிறுமியை மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தார். கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மைனாவதி நேற்று அளித்த புகாரின்பேரில், வடிவேல், அவரது தந்தை ராமசாமி, தாய் சாந்தி, சிறுமியின் பெற்றோர், சிறுமியின் மாமா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in