கடலூர் மாவட்டத்தில் : கரோனாவுக்கு 19 பேர் உயிரிழப்பு :

கடலூர் மாவட்டத்தில் : கரோனாவுக்கு  19 பேர் உயிரிழப்பு :
Updated on
1 min read

கடலூர் மாவட்டத்தில் நேற்று 262 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 481 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 2,626 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 19 பேர் உயிரிழந்தனர். இவர்களைச் சேர்த்து இதுவரையில் 694 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 244பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 412பேர் உட்பட 37,530 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 3,008 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று

ஒருவர் உயிரிழந்தது உட்பட இதுவரை 312 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 118 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுவரையில் 25,012 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் நேற்று ஒருவர் உயிரிழந்த நிலையில், இதுவரை 184 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in