எத்தனாலில் தண்ணீர் கலந்து சாராயம் என விற்ற இருவர் கைது :

எத்தனாலில் தண்ணீர் கலந்து சாராயம் என விற்ற இருவர் கைது  :
Updated on
1 min read

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேவனாங்குறிச்சியில், கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், போலீஸார் சோதனை நடத்தினர்.

அங்கு சாராயம் விற்றுக் கொண்டு இருந்த கண்ணன் (31) என்பவரைக் கைது செய்து விசாரித்தனர். இதில், திருச்செங்கோடு குமரேசபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (28) என்பவர், எத்தனாலில் தண்ணீரை கலந்து சாராயமாக விற்பனை செய்ய கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, கண்ணன் வீட்டில் சோதனை செய்ததில், சோப்பு தயாரிக்க பயன்படுத்தும் 2 லிட்டர் எத்தனால் என்ற எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. கண்ணன் மற்றும் கார்த்திக் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

எரிசாராயத்தை பயன்படுத்தி கள்ளச்சாராயம் மற்றும் பட்டைசாராயம் தயாரிப்பவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக காவல்துறையினருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், சாராயம் தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்றும் நாமக்கல் மாவட்ட எஸ்பி சரோஜ் குமார் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in