சாம்பல் லாரியில் மதுபானம் கடத்திய 2 பேர் கைது :

சாம்பல் லாரியில் மதுபானம்  கடத்திய 2 பேர் கைது :
Updated on
1 min read

அரியலூர் மாவட்டம் ஆண்டி மடம் அருகேயுள்ள பெரியாத் துக்குறிச்சி சோதனைச் சாவ டியை நேற்று முன்தினம் இரவு கடந்து செல்ல முயன்ற ஒரு லாரியை ஆண்டிமடம் போலீஸார் தடுத்து நிறுத்தினர். போலீஸாரைக் கண்டதும், லாரியை நிறுத்திவிட்டு தப்பி யோட முயன்ற ஓட்டுநர் மற்றும் உதவியாளரை போலீஸார் பிடித்து விசாரித்தனர்.

இதில், அவர்கள் ஆண்டி மடம் அருகேயுள்ள கூவத்தூர் ஆரோக்கியசாமி(47), ராஜேஷ்(23) என்பதும், நெய்வே லியிலிருந்து கும்பகோணத் துக்கு நிலக்கரி சாம்பல் ஏற்றிச் செல்வதும் தெரியவந்தது. லாரியில் போலீஸார் சோதனை நடத்தியபோது, அதில் 61 மது பாட்டில்களை பதுக்கி வைத்தி ருந்ததைக் கண்டறிந்தனர். மதுபாட்டில்களுடன் லாரியை போலீஸார் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in