சிறுமியை திருமணம் செய்தவர் மீது போக்ஸோ வழக்கு :

சிறுமியை திருமணம் செய்தவர் மீது போக்ஸோ வழக்கு :
Updated on
1 min read

கரூர் அருகேயுள்ள மேலப்பாளை யத்தைச் சேர்ந்த முருகேசன்- அமுதவள்ளி தம்பதியரின் மகன் சந்தோஷ்(22). இவருக்கும் பிளஸ் 1 படித்து வந்த 16 வயது சிறுமிக்கும் கடந்த 7-ம் தேதி வெண்ணெய்மலையில் திருமணம் நடைபெற்றது.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட சமூக நல அலுவலர் தனலட்சுமி, கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார்.அதன் பேரில் சந்தோஷ், அவரது தாய் அமுதவள்ளி மற்றும் சிறுமியின் பெற்றோர் மீது குழந்தை திருமண தடுப்புச்சட்டம், குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம்(போக்ஸோ) ஆகியவற்றின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசா ரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in