விதிகளை மீறிய 50 கடைகளுக்கு சீல் :

விதிகளை மீறிய 50 கடைகளுக்கு சீல் :
Updated on
1 min read

கரூர் நகராட்சி தெற்கு முருகநாதபுரம் தெருவில் எலெக்ட்ரானிக்ஸ், செல்போன் உதிரிபாக விற்பனை மற்றும் பழுது நீக்குதல், பிளாஸ்டிக் பொருட்கள், பேன்சி ஸ்டோர், விளையாட்டுப் பொருட்கள் விற்பனை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

கரோனா ஊரடங்கு காரணமாக இத்தெருவில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. கடந்த சில நாட்களுக்கு முன் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கரூர் தெற்கு முருகநாதபுரம் தெருவில் உள்ள எலெக்ட்ரானிக்ஸ், செல்போன் உதிரி பாக விற்பனை, பழுது நீக்குதல், பிளாஸ்டிக் விற்பனை உள்ளிட்ட கடைகளை விதிகளை மீறி நேற்று திறந்து விற்பனையில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த நகராட்சி நிர்வாகத்தினர் கடைக்காரர்களை எச்சரித்ததுடன், 50 கடைகளுக்கு சீல் வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in