

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து விநாடிக்கு 1500 கன அடியாக அதிகரித்தது.
பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று முன் தினம் விநாடிக்கு 800 கன அடி என்ற அளவில் நீர் வரத்து இருந்தது. இந்நிலையில், ஒகேனக்கல் சுற்று வட்டாரப் பகுதிகளிலும், தமிழகத்தை நோக்கி வரும் காவிரியாறு அமைந்துள்ள வனப்பகுதிகளிலும் பெய்த மழை காரணமாக நேற்று நீர்வரத்து சற்றே உயர்ந்தது.
நேற்று காலை அளவீட்டு நிலவரப்படி விநாடிக்கு 1500 கன அடி வீதம் ஒகேனக்கல் காவிரியாற்றில் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது.