கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர் மரணம் :

கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர் மரணம் :
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த வாரம் 4 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்புக்கான அறிகுறி தென்பட்டது. இதையடுத்து அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் இருவர் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் மதுரையில் சிகிச்சை பெற்று வந்த காரைக்குடி ரயில்வே ரோட்டைச் சேர்ந்த முத்துவேல் (63) நேற்று உயிரிழந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in