புதிதாக 1,077 பேருக்கு கரோனா :

புதிதாக 1,077 பேருக்கு கரோனா :
Updated on
1 min read

வேலூர், திருப்பத்தூர், தி.மலை மாவட்டங்களில் புதிதாக 1,077 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று முன்தினம் வரை 43,448 பேராக இருந்தது. இவர்களில், 39,866 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா தொற்றுக்கு மொத்தம் 806 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் நேற்று 259 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக நேற்று 336 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. கரோனா தொற்றுக்கு நேற்று 5 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனைகளில் 3,341 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவண்ணாமலை

36,127 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 6,963 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஓரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 442-ஆக அதிகரித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in