தாய் இறந்த துக்கம் மகன் தூக்கிட்டு தற்கொலை :

தாய் இறந்த துக்கம்                     மகன் தூக்கிட்டு தற்கொலை :
Updated on
1 min read

ராமநாதபுரம் அருகே 90 வயது தாய் இறந்த துக்கத்தில் 65 வயது மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் காந்தி நகரைச் சேர்ந்தவர் காளிமுத்து(65). இவருக்கு திருமணம் ஆகவில்லை. பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவர் தனது 90 வயது தாயுடன் வசித்து வந்தார். இவரது தந்தை மயி லைக்கண்ணன் ஏற்கெனவே இறந்துவிட்டார்.

இந்நிலையில் தாய் வள்ளி கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். இதனால் வீட்டில் தனியாக வசித்து வந்த காளிமுத்து கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டார். இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தேவிபட்டினம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in