கரோனா நோயாளி தற்கொலை :

கரோனா நோயாளி தற்கொலை :
Updated on
1 min read

நாமக்கல் அரசு மருத்துவமனை கழிவறையில் கரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் அழகு நகரைச் சேர்ந்தவர் யுவராஜ் (42). கூலித் தொழிலாளி. கரோனா தொற்று காரணமாக இவருக்கு கடந்த 1-ம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜனுடன் கூடிய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நாள் முதல் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்த யுவராஜ், நேற்று அதிகாலை மருத்துவமனையின் எலும்பு முறிவுப் பிரிவில் உள்ள கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த நாமக்கல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். யுவராஜ்க்கு கோகிலா என்ற மனைவியும், ஒரு மகன், 2 மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in