

சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையின் படி, ஈரோடு மாவட்டத்தில் நேற்று 1671 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 1565 பேர் குணமடைந் துள்ள நிலையில், சிகிச்சை பலனின்றி 8 பேர் உயிரிழந்தனர். மாவட்ட அளவில் தற்போது 16 ஆயிரத்து 87 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலத்தில் 1,253 பேர் பாதிப்பு
மாவட்டத்தில் கரோனா தொற்று சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 798 ஆக உயர்ந்துள்ளது. தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருபவர்களில் நேற்று 687 பேர் குணமடைந்தனர்.