புதிதாக 1,043 பேருக்கு கரோனா தொற்று :

புதிதாக 1,043 பேருக்கு கரோனா தொற்று :
Updated on
1 min read

வேலூர், திருப்பத்தூர், தி.மலை மாவட்டங்களில் புதிதாக 1,043 பேர் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42 ஆயிரத்து 907-ஆக இருந்தது. கரோனா தொற்றுக்கு இதுவரை 777 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக நேற்று 279 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 327 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 3,462 பேரில் 441 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். சிகிச்சை பலனின்றி நேற்று 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருவண்ணாமலை

ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 432-ஆக அதிகரித் துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in