பாபநாசம் உட்பட 4 அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு : 80,111 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்

பாபநாசம் அணையில் இருந்து சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவைத்தார். (அடுத்தபடம்)பாபநாசம் அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர்.
பாபநாசம் அணையில் இருந்து சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவைத்தார். (அடுத்தபடம்)பாபநாசம் அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர்.
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்ட அணை களில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதன்மூலம், 80,111 ஏக்கர் நிலங்கள் முதல்போக பாசனம்பெறும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, வடக்கு பச்சையாறு ஆகிய அணைகளில் இருந்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி, பாபநாசம், சேர்வ லாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு தண்ணீர் திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, ஞானதிரவியம் எம்பி, அப்துல் வகாப் எம்எல்ஏ, நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு கூறும்போது, “தமிழக அரசு உத்தரவின்படி திருநெல் வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி பாசன விவசாயிகளுக்காக பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் உள்ள நீர் இருப்பை கருத்தில்கொண்டு ஜூன் 1 முதல் 15.10.2021 வரை 137 நாட்களுக்கு 1,400 கனஅடிக்கு மிகாமல் தேவைக்கேற்ப தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும்.

இதனால் திருநெல்வேலி மாவட்டத்தில் வடக்கு கோடை மேலழகியான் கால்வாய் (2,260 ஏக்கர்), தெற்கு கோடை மேலழகியான் கால்வாய் (870 ஏக்கர்), நதியுண்ணி கால்வாய் (2,460) ஏக்கர்), கன்னடியன் கால்வாய் (12,500 ஏக்கர்), கோடகன் கால்வாய் (5,048 ஏக்கர்), பாளையங்கால்வாய் (5,974 ஏக்கர்), திருநெல்வேலி கால்வாய் (4,168 ஏக்கர்) மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருதூர் மேலக்கால் கால்வாய் (11,807 ஏக்கர்), மருதூர் கீழக்கால் கால்வாய் (7,144 ஏக்கர்), தெற்கு பிரதானக்கால்வாய் (12,309 ஏக்கர்) மற்றும் வடக்கு பிரதான கால்வாய் (10,538 ஏக்கர்) என மொத்தம் 75,078 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுக பாசன பரப்புகளுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத் தில் அம்பாசமுத்திரம், சேரன்மகா தேவி, திருநெல்வேலி, பாளை யங்கோட்டை ஆகிய வட்டங்கள் மற்றும் கிராமங்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் வைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம் ஆகியவற்றை உள்ளடக்கிய வட்டங்கள் மற்றும் கிராமங்கள் பயன்பெறும். விவசாய பெரு மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி சாகுபடி செய்ய வேண்டும். நீர் விநியோக பணியில் பொதுப்பணித்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றார்.

நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் பிரதீக்தயாள், பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் ஞானசேகரன், உதவி செயற் பொறியாளர் தங்கராஜ், வேளாண்மை துறை இணை இயக்குநர் கஜேந்திர பாண்டியன், மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கடாச்சலம், உதவி செயற்பொறியாளர்கள் சீனிவாசன், அழகுராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வடக்கு பச்சையாறு

137 நாட்களுக்கு 1,400 கனஅடிக்கு மிகாமல் தேவைக்கேற்ப தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in